ஈரோடு மாவட்டத்தில் நாளை 993 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை ஐந்தாம் கட்டமாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு.

Update: 2021-10-09 13:15 GMT

பைல் படம்.

தமிழகம் முழுவதும் நாளை 10.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நாளை 993 இடங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags:    

Similar News