காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள்

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Update: 2021-12-01 05:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா இன்று நடந்தது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தலைமை வகித்தார்.

விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் அல்டிமேட் தினேஷ் தலைமையில் அக்கட்சியின் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ பி ரவி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட மாநகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுக் கட்சியில் இருந்து புதிதாக இணைந்த அல்டிமேட் தினேஷ், சபீக் அலி, சுதா,  ஜுபைர் அகமது, முகமது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News