குறைந்தபட்ச ஊதியம் கோரி வரும் 7-ஆம் தேதி காத்திருப்பு போராட்டம்..!
குறைந்தபட்ச ஊதியம் கோரி வரும் 7-ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பேசியவர்கள்
♦ ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் குணசேகரன்
♦ சங்க மாவட்ட செயலாளர் மணியன்
♦ துணை தலைவர் மூர்த்தி
♦ துணை செயலாளர் ஞானசேகரன்
♦ பொருளாளர் ரவி உட்பட பலர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர்கள்
♦ துாய்மை பணியாளர்கள் - தினக்கூலி
♦ கொசு ஒழிப்பு பணியாளர்கள் - தினக்கூலி
♦ஓட்டுனர்கள் - தினக்கூலி
♦குடிநீர் வினியோக பணியாளர்கள் - தினக்கூலி
♦துாய்மை காவலர்கள் - தினக்கூலி
♦மகளிர் குழு - தினக்கூலி
இவர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம், சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்படுவதில்லை.
பணியாளர் கோரிக்கைகள்
♦ ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட்டு, 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
♦ குறைந்த பட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமலாக்க வேண்டும்.
♦ இ.எஸ்.ஐ., திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
♦ துாய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்க வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 7ல் சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன் நடக்கும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.