ஈரோடு ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளருக்கு பாராட்டு...

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-01-27 06:51 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளர் பட்டம்மாளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், நடைபெற்ற குடியரசு தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அரசு அலுவலர்கள், காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.  மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்க பட்டது.

நிகழ்ச்சியின்போது, ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தூய்மை பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பட்டம்மாளுக்கு அவரது பணியை பாராட்டி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தூய்மை காவலர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரால் பாராட்டு பெற்ற மாக்கினாங்கோம்பை ஊராட்சி தூய்மை பணியாளர் பட்டம்மாளுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய பாராட்டு சான்றிதழை காண்பித்து தூய்மை பணியாளர் பட்டம்மாள் அனைவரிடமும் வாழ்த்து பெற்றார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் ராஜம்மாள், முன்னாள் கவுன்சிலர் விசுவநாதன், தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சாந்தி ஜெயராம், ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி, ஊராட்சி செயலாளர் ராதிகா மற்றும் பல்வேறு அதிகாரிகள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News