ஈரோடு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 102 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 666 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 991 பேர் குணமடைந்தார்கள். இன்று மட்டும் 102 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 999 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 676 ஆக உயர்ந்தது.