ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.8மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.8 புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2023-11-07 14:15 GMT

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.8) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவம்பர் 08) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- யூனிட்டி நகர், செட்டியம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சானார்பாளையம், லிங்கப்பக்கவுண்டன் புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி கோவில்பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி மற்றும் சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News