கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கோபியில் 9 இடங்களில் நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-08 04:15 GMT

ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில்,  இன்று (ஜன.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் ஜெ.பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி, நர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வாய்க்கால் சாலை, நகராட்சி நடுநிலைப் பள்ளி - மார்க்கெட் சாலை, டி.எஸ்.சாரதா நடுநிலைப் பள்ளி - அக்ரஹாரம், ஜெயராம் நடுநிலைப் பள்ளி - ஜெயராம் எக்ஸ்டென்ஷன், நகராட்சி மேல்நிலைப் பள்ளி - மொடச்சூர், வேங்கம்மையார் உயர்நிலைப் பள்ளி - பச்சைமலை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கபிலர் வீதி, வைர விழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கச்சேரி வீதி, நகராட்சி துவக்கப் பள்ளி - நாயக்கான்காடு, செங்கோடப்பா துவக்கப பள்ளி - பாரியூர் சாலை. மேலும், கோபி அரசு மருத்துவமனைகள் என 9 இடங்களில் கொரோனா தடுப்பூசியானது செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News