ஈரோடு மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

Update: 2022-06-23 14:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி, ஈரோட்டில் இன்று 8 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 735 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உள்ளது.

Tags:    

Similar News