அந்தியூர் பேரூராட்சி: 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அந்தியூர் பேரூராட்சியின் 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2022-02-07 05:45 GMT

வாக்கு சேகரிப்பின் போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்தியூர் பேரூராட்சி 12வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொன்னுப்பையன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை, 12வது வார்டுக்குட்பட்ட பல்வேறு இடங்களில், வேட்பாளர் பொன்னுப்பையனுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட பொது செயலாளர் பாசம் மூர்த்தி, அந்தியூர் நகரத் தலைவர் ஜலாலூதீன் ஆகியோர் கை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுக வார்டு செயலாளர் செல்வன், முத்து, முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ், கார்த்தி, பழனிமுத்து, மூர்த்தி, வெங்கடேஷ், மகளிர் அணியினர் உட்பட பலர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News