கோபிச்செட்டிப்பாளையம் : புகையிலை விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு

கோபிச்செட்டிப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-12-28 17:45 GMT

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோபி காவல் நிலைய உட்கோட்டத்திற்கு  உட்பட்ட கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், சிறுவலூர், வரப்பாளையம், நம்பியூர், கடத்தூர் என பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கடைகளில் சிலர் குட்கா உள்பட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். மேலும் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார். கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News