பவானிசாகர் அணை நீர்மட்டம் 68.02 அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (6ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 68.02 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2024-07-06 02:45 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (6ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 68.02 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்கள் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த அணை 105 அடி நீர்மட்ட மொத்த உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. 

நேற்று (5ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,761 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (6ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 548 கன அடியாக சரிந்தது. 

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 67.79 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 68.02 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 10.05லிருந்து 10.14 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. 

மேலும், அணையின் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன‌ அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News