67 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை நீர்மட்டம்

Erode news- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழையால் பெய்து வருவதால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67 அடியை நெருங்கியது.

Update: 2024-07-03 02:45 GMT

Erode news- பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழையால் பெய்து வருவதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67 அடியை நெருங்கியது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, 3 மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்களின் முக்கிய பாசன தேவையாகவும் திகழ்கிறது. 

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று (2ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,994 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (3ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,538 கன அடியாக சரிந்தது. 

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 66.14 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 66.81 அடியாக உயர்ந்து 67 அடியை நெருங்கியது. அதேபோல், அணையில் நீர் இருப்பு  9.41லிருந்து 9.66 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும்,  கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News