பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 528 கன அடியாக உள்ளது.

Update: 2023-01-22 05:00 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்)

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. 

பவானிசாகர் அணையின் இன்றைய (22.01.2023) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 101.61 அடி , 

நீர் இருப்பு - 30.00 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 528 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து 1,218 கன அடி) ,

நீர் வெளியேற்றம் - 2,750 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,500 கன அடி நீரும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 1,100 கன அடி, பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,750 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News