அந்தியூர் வாழைத்தார் ஏல நிலையத்தில், ரூ.5 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 5 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.;

Update: 2022-02-09 10:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 31 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 600 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 470 ரூபாய்க்கும் ஏலம் போயின.

அதேபோல், பூவன் தார் ஒன்று 320 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 330 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 470 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் 3 ஆயிரம் வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐந்து லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News