அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பிறந்த குழந்தை: பணியாளர்களுக்கு மக்கள் பாராட்டு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு உதவிய பணியாளர்களை பொது மக்கள் பாராட்டினர்.

Update: 2024-07-02 12:00 GMT

ஆம்புலன்சில் பிறந்த குழந்தையுடன் 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் பவுல்ராபின்சன், ஓட்டுநர் மகேந்திரன்.

அந்தியூர் பர்கூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு உதவிய பணியாளர்களை பொது மக்கள் பாராட்டினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி சோளங்கனை மலைக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ். இவரின் மனைவி மலர் (வயது 22). நிறைமாத கர்ப்பிணி. மலருக்கு இன்று (2ம் தேதி) மதியம் பிரசவ வலி ஏற்பட்டது.

இந்நிலையில், குடும்பத்தினர் 108 அவசர ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மலைக்கிராமத்துக்கு சென்ற 108 வாகனம் மலரை அழைத்துக் கொண்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடர்ந்த வனப்பகுதி வழியே சென்று கொண்டிருந்தது. 

அப்போது, மலருக்கு பிரசவ வலி தாங்க முடியாமல் துடித்ததால், ஓட்டுநர் மகேந்திரன் வாகனத்தை நிறுத்தினார். பின்னர், வாகனத்தில் பயணித்த அவசர கால மருத்துவ நுட்புணர் பவுல்ராபின்சன் பிரசவம் பார்த்தார். இதில், ஆண் குழந்தை பிறந்தது. 

இதனையடுத்து, தாயும், குழந்தையும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பிரவசத்திற்கு உதவிய அவசர கால மருத்துவ நுட்புணர் பவுன்ராபின்சன், ஓட்டுநர் மகேந்திரன் ஆகியோரை 108 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் மற்றும் மலரின் உறவினர்கள் பாராட்டி நன்றி கூறினர்.

Tags:    

Similar News