பெருந்துறை அருகே 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவர்

பெருந்துறை அருகே 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது.;

Update: 2021-12-05 09:30 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 16 வயது சிறுமி அந்த பகுதியில்  11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது மருத்துவமனையில்  மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நேசமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அவரது தலைமையிலான குழுவினர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

அப்போது தனது உறவினரான ஆட்டோ டிரைவர் கவின்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை என்னை பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தார். இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் நேசமணி பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவின்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News