ஆப்பக்கூடலில் தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.

Update: 2024-01-31 13:45 GMT

தொழுநோய் விழிப்புணர்வு பற்றிய நலக்கல்வி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைப்பட்டது.

ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது. இப்பேரணியை, ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையின் உப தலைவர் தொடங்கி வைத்தார். பேரணியில், தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சக்தி சுகர்ஸ் விஎம்கே கைலாசம் மருத்துவமனையில் தொடங்கிய பேரணி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து தன்னிலை சுகாதார இயக்க தொழுநோய் மருத்துவமனை வரை சென்றடைந்தது. இப்பேரணியில் டாக்டர் மகாலிங்கம் செவிலியர் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.


இதனையடுத்து, தொழுநோய் மருத்துவமனையில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கப்பட்டது. இதில் தொழுநோய் பற்றி அறிகுறிகள், தொழுநோய்க்கானசிகிச்சை முறைகள், தொழு நோயின் வகைகள், தொழுநோயினால் ஏற்படும் ஊனங்களை சரி செய்யும் சிறப்பு சிகிச்சைகள், ஊனத்தை சரி செய்யும் அறுவை சிகிச்சை முறைகள், தொழு நோயாளர்களுக்கு வழங்கப்படும் உதவி திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பவானி வட்டார மருத்துவ அலுவலர் விழிப்புணர்வு முகாமினை தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இதில் மாவட்ட நலக்கல்வியாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் இருந்து சிறப்புரை ஆற்றினார். வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் பற்றி எடுத்துரைத்தார்.


இறுதியாக ஸ்பர்ஷ் தொழு நோய் விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. தன்னிலை சுகாதார இயக்கம் தொழுநோய் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் நன்றியுரை வழங்கினார்.

இந்த தொழுநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாமில் சக்தி சர்க்கரை ஆலையின் உப தலைவர், தொழிலாளர் நல அலுவலர், சக்தி நகர் சுழற்சி சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள் பவானி வட்டார மருத்துவ அலுவலர், நலக்கல்வியாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், ஈரோடு, வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News