அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஆதரித்து எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் குருசாமியை ஆதரித்து எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு.

Update: 2021-10-04 06:45 GMT

வாக்கு சேகரித்த அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம்.  

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக ஆதரவு வேட்பாளர் குருசாமியை ஆதரித்து பூட்டு சாவி சின்னத்தில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேற்று மாலை சங்கராபாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார். இதனையடுத்து இன்று காலை குருநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடு வீடாக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் சென்று வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News