அந்தியூரில் ரூ. 4.43 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூரில், 3,100 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். ரூ.4.43 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போயின.

Update: 2021-10-12 23:27 GMT

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு, ,3, 100 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 4 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 300 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 300 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 200 ரூபாய் க்கும், மொந்தன் தார் ஒன்று 200 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 370 ரூபாய்க்கு விற்பனையாகின. 

Tags:    

Similar News