முழு கொள்ளளவை எட்டியது அந்தியூர் பெரிய ஏரி
11 ஆண்டுகளுக்கு பிறகு அந்தியூர் பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்;
முழு கொள்ளளவை எட்டிய அந்தியூர் பெரிய ஏரி
அந்தியூர் பெரிய ஏரி 11 ஆண்டுகளுக்குப்பிறகு நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த சில தினங்களாக வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி ஆகியவை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்பொழுது அந்தியூர் பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை இன்று எட்டியுள்ளதால், கிழக்கு பகுதியில் உள்ள உபரி நீர் தற்பொழுது வெளியேற தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் 11 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் தேங்காய், பழம், பூ வைத்து வெளியேறும் உபரி நீரை வரவேற்றனர்.