இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அந்தியூர் எம்எல்ஏ

Erode news- திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் எம்எல்ஏ நேற்று இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-03-27 03:30 GMT

Erode news- அந்தியூர் சங்கராபாளையம் ஊராட்சி குருநாதபுரம் பகுதியில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்.

Erode news, Erode news today- திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் எம்எல்ஏ நேற்று இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார் . இவருக்கு, ஆதரவாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் அந்தியூர் ஒன்றியம் சங்கராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சங்கராபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குருநாதபுரம், குருநாதபுரம் காலனி, வள்ளலார்புரம், வேலாயுதபுரம், இந்திராநகர் பகுதிகளில் வீதி, வீதியாக சென்று கதிர் அரிவாள் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இதில், சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் குருசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், சிபிஎம் தாலுகா செயலாளர் முருகேசன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட துணை செயலாளர் கணபதி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் நாகராஜா,‌ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், சிபிஎம் தாலுக்கா துணை செயலாளர் அப்புச்சாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News