ஈரோட்டில் அன்னபூரணி அரசு அம்மா சார்பில் சிறப்பு தியான வகுப்பு

ஈரோட்டில் அன்னபூரணி அரசு அம்மா பீடத்தின் சார்பில் சிறப்பு தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-06-30 11:37 GMT

அன்னபூரணி அரசு அம்மாவால் நடத்தப்பட்ட ஆன்மீக வகுப்பு.

Erode News, Erode Today News, Erode Live Updates - ஈரோட்டில் அன்னபூரணி அரசு அம்மா பீடத்தின் சார்பில் சிறப்பு தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி நடைபெற்றது. 

ஆன்மீக பூமியான திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த அன்னபூரணி அரசு அம்மா பீடத்தின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் சிறப்பு தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (30ம் தேதி) ஒருநாள் தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆன்மீக வகுப்பு அன்னபூரணி அரசு அம்மாவால் நேரடியாக நடத்தப்பட்டது. இதில் அம்மா மன அமைதி மற்றும் பேரானந்தம், பிரபஞ்ச சக்தியை உணர்தல், ஜீவன் முக்திக்கான எளிய வழி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஆகியவற்றிற்கான தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி வழங்கினார்.

Tags:    

Similar News