தாளவாடி அருகே சாலையில் வந்த காரை மிரட்டிய யானை

தாளவாடி அருகே சாலையில் வந்த காரை யானை மிரட்டியதால், மற்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

Update: 2024-06-29 19:15 GMT

காரை மிரட்டிய யானையின் வீடியோ காட்சி படங்கள்.

தாளவாடி அருகே சாலையில் வந்த காரை யானை மிரட்டியதால், மற்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்கின்றன. இவை இரவு மற்றும் பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலைகளில் நடமாடுகின்றன.

இந்நிலையில், நேற்று ஆசனூரிலிருந்து கேர்மாளம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் கெத்தேசால் மலைக் கிராமம் அருகே சாலையோரம் இரண்டு தந்தங்களுடன் கூடிய ஆண் யானை ஒன்று மரக்கிளைகளை தின்று கொண்டிருந்தது.

அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் காட்டு யானையை கண்டு அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தி, யானையை செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். அப்போது, எதிரே அந்த வழியாக அதிக ஒலி எழுப்பியபடி கார் ஒன்று வந்தது.

இதனால், ஆத்திரமடைந்த யானை அந்த காரை துரத்தி மிரட்டியது. எனினும், கார் ஓட்டுநர் யானையிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டியதால் உயிர் தப்பினார். இந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். தற்போது, இது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News