ஈரோட்டில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-02-01 11:00 GMT

ஈரோட்டில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு.

ஈரோட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தேர்தல் பணிக்குழு தலைவரும் அமைப்பு செயலரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பண்ணன், தளவாய்சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜு, தனபால், அன்பழகன், காமராஜ், ஓ.எஸ். மணியன், கோகுல இந்திரா, விஜய பாஸ்கர், கடம்பூர்  ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், உடுமலை ராதா கிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர்  ராமச்சந்திரன், வைகைச்செல்வன், செல்வராஜ், மோகன், சிவபதி, முக்கூர் சுப்பிரமணியம், செல்லபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், தாமோதரன், இசக்கி சுப்பையா, கரூர் சின்னசாமி, வளர்மதி, எம். எஸ்.எம்.ஆனந்தன், வரகூர் அருணாச்சலம், டாக்டர் சரோஜா, ராஜ லட்சுமி, வீரமணி, சம்பத், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணன் ரெட்டி, சண்முகநாதன் சோமசுந்தரம், மாதவரம் மூர்த்தி, ரமணா, பரஞ்சோதி, தாமரை ராஜேந்திரன், மாஃபா பாண்டியராஜன், பாஸ்கரன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா அரக்கோணம் ரவி மற்றும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவரும் சேலம் புறநகர் மாவட்ட செயலருமான இளங்கோவன் மற்றும் மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றியசெயலாளர்கள், பகுதி செயலர்கள், மகளிர் அணியை சேர்நதவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள், த.மா.க., மாநில பொதுச்செயலர் விடியல் எஸ்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News