அந்தியூரில் ரூ.6.63 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ஆறு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

Update: 2022-05-09 12:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று,  விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த 5,893 தேங்காய்கள், குறைந்த விலையாக 4 ரூபாய் 75 பைசாவிற்கும், அதிக விலையாக 15 ரூபாய் 25 பைசாவிற்கும், 7 மூட்டைகள் ஆமணக்கு ஒரு கிலோ 64 ரூபாய் 09 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 51 மூட்டைகள் தேங்காய் பருப்பு ஒரு கிலோ 77 ரூபாய் 11 பைசா முதல் 85 ரூபாய் 17 பைசா வரையிலும், 41 மூட்டைகள் எள் ஒரு கிலோ 106 ரூபாய் 19 பைசாவிற்கும், 113 மூட்டைகள் மக்காச்சோளம் ஒரு கிலோ 22 ரூபாய் 29 பைசாவிற்கும் விற்பனையானது. இன்றைய வர்த்தகத்தில், மொத்தம்‌ 182.53 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள், ஆறு லட்சத்து 63 ஆயிரத்து 356 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News