பவானி அருகே அறிவுரை கூறிய தந்தையை கட்டையால் தாக்கிய பாசக்கார மகன் கைது

பவானி அடுத்த அம்மாபேட்டை அறிவுரை கூறிய தந்தையை கட்டையால் தாக்கிய வாலிபரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-06-22 10:15 GMT

தினேஷ்குமார்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் இவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.இவரது மகன் தினேஷ்குமார் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி ஊரை சுற்றி கொண்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

மேலும் அடிக்கடி தாய் மற்றும் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தினேஷ்குமாருக்கு போதை அதிகமாகவே அவரது அம்மாவை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த தமுனுசாமி தினேஷை வன்மையாக கண்டித்துள்ளார்.

அப்போது போதையில் இருந்த தினேஷ்குமார் அருகிலிருந்த கட்டையால் முனுசாமியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முனுசாமி அங்கிருந்து தப்பி ஓடி பவானியில் உள்ள தனியார் மருத்துவ சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்நிலையில் முனுசாமி அளித்த புகாரின் பேரில் மகன் தினேஷ்குமாரை  பிடித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News