பெருந்துறை அருகே நோயால் அவதிப்பட்டு வந்தவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

பெருந்துறை அருகே நோயால் அவதிப்பட்டு வந்தவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2021-12-12 09:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த பொன்முடி ஊராட்சி  புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 54). கடந்த சில நாட்களாக கணைய நோயால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு மயங்கினார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கந்தசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News