ஈரோடு மாவட்டத்தில் 95 சதவீத பேருந்துகள் இயக்கம்

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 95 சதவீத பேருந்துகள் இயங்கி வருகிறது.

Update: 2024-01-09 02:30 GMT

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதை படத்தில் காணலாம். மேலும், அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 95 சதவீத பேருந்துகள் இயங்கி வருகிறது. 

இன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை என அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக நேற்று இரவு அறிவித்தனர்.

இதனை முறியடிக்க தொ.மு.ச வினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாததால் 95 சதவீத பேருந்துகள் முழு வீட்டில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வழக்கம்போல பேருந்துகள் ஓடுமா என மக்கள் அச்சமடைந்தனர். அதேசமயம் தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை கொண்டு மக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கத்தை விட குறைவாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிமனை முன்பு பிற தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி உள்ளிட்ட 12 கிளைகளிலும் 740 பேருந்துகள் தினமும் இயங்கி வருகின்றது. இதில் 7 மணி நிலவரப்படி 700 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இன்று அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் அதிகாலை முதல் பேருந்துகளை இயக்கப்படுவதை ஆய்வு மேற்கொண்டு தேவையான ஏற்பாடுகள் செய்து வருகிறார். குறிப்பாக பர்கூர் மலைவாழ் மக்கள் பயன் பெறும் வகையில் மலை பகுதிகளுக்கும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. அதிகாலை முதல் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று வரும் மாணவ மாணவிகள் சகப் பயணிகளும் வழக்கம்போல் பேருந்தில் பயணித்து வருகின்றனர்.

இதனால் எதிர்கட்சிகளின் போராட்ட அறிவிப்பு பிசுபிசுத்தது.

Tags:    

Similar News