ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் 408 மனுக்கள்: உடனடி தீர்வுக்கு ஆட்சியர் உத்தரவு

ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 408 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-24 12:00 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா.

ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 408 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (24ம் தேதி) நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 408 மனுக்கள் பெறப்பட்டன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் சுழுல் நிதி தலா ரூ.10 ஆயிரம் மற்றும் சமுதாய முதலீட்டு நதி  ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் என தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமினில் உள்ள 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் மற்றும் மொடக்குறிச்சி, அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமினில் 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் என மொத்தம் 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு கடனுதவியாக மொத்தம் ரூ.17.50 லட்சத்திற்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) (பொ) ராஜகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News