ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 306 மனுக்கள்

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 306 மனுக்கள் பெறப்பட்டன.;

Update: 2023-12-04 12:22 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குறைகளை கேட்டறிந்தார். அடுத்த படம்:- பயனாளி ஒருவருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 306 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 306 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 500 வீதம் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.40 ஆயிரத்து 828 மதிப்பிலான மாவு அரைக்கும் இயந்திரத்தினையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா (பொ), உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)ராஜ கோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் சதீஷ்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News