கீழ்வாணியில் கமிஷன் பணம் தருவதில் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் கமிஷன் பணம் தருவதில் தகராறு கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-17 06:30 GMT

கைது செய்யப்பட்ட 3 பேர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த கீழ்வாணி அருகே உள்ள கேத்தநாயக்கனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி, திப்புசாமி மற்றும் சின்னகலசாமி ஆகியோர் கூட்டாக மரம் விற்பனை செய்ததில், கமிஷன் பணம் தருவதில் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 15ம் தேதி இரவு பழனிச்சாமி வீட்டிற்கு சென்று, சின்னசாமி, திப்புசாமி மற்றும் சின்னகலசாமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் பழனிச்சாமி , அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது மகன் மாதேஸ்வரன் ஆகியோர் மீது  தாக்குதல் நடத்தியதோடு, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி மற்றும் பழனியம்மாள் பவானி அரசு மருத்துவமனையிலும், மாதேஸ்வரன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News