ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 210 மனுக்கள்
ஈரோடு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்பெறப்பட்ட 210 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார்.;
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 210 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16ம் தேதி) திங்கட்கிழமை நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சக்கர நாற்காலி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 210 மனுக்கள் வரப்பெற்றன.
இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு காமாட்சிக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வி நந்திதாவுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.