ஈரோடு மாவட்டத்தில் 18 போலீசார் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் உள்பட 18 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2024-09-19 02:15 GMT

போலீசார் பணியிட மாற்றம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் உள்பட 18 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய போலீசார் 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய மஞ்சுநாதன் கடம்பூர் காவல் நிலைய தலைமை காவலராகவும், ஆப்பக்கூடல் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய செந்தில்குமார் அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலராகவும், காஞ்சிக்கோவில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம் சித்தோடு காவல் நிலைய தனிப்பிரிவுக்கும். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சதாசிவம், அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல், புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமை காவலராகவும், பவானிசாகர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய ரமேஷ் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய தலைமை காவலராகவும், ஆசனூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றிய மூர்த்தி, அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும், கடம்பூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய கங்காதரன், அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும், சித்தோடு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சந்தோஷ்குமார், அதே போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராகவும், தாளவாடி தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சதீஷ்குமார் பங்களாப்புதூர் காவல் நிலைய தலைமை காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல், தாளவாடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய இளங்கோ, அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகவும், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய கனகராஜ், அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும், புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய மகாதேவன், அதே காவல் நிலையத்தில் நிலைய தனிப்பிரிவுக்கும், நசியனூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திருமூர்த்தி காஞ்சிக்கோவில் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், பவானிசாகர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய சக்திவேல், அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும், பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய பூபதி, கடம்பூர் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், தாளவாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய அழகேசன் ஆசனூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும். மாவட்ட கியூ பிரிவு போலீஸ் ஏட்டு மெய்ந்தன் பங்களாப்புதூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News