பாப்பிரெட்டிப்பட்டியில் பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டியில், பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-22 04:00 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தாளவாடியை சேர்ந்தவர், கனசோழா( எ) தனுஷ், வயது 27. எலக்ட்ரிசன். இவர் கடந்த மாதம் 27 ந் தேதி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபர் தனுஷை போக்சோவில் கைது செய்தனர்.

Tags:    

Similar News