பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைல்கல் மீது பைக் மோதி டிரைவர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைல்கல் மீது பைக் மோதி டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-01-16 15:30 GMT

விபத்தில் பலியான தமிழரசன்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைல்கல் மீது பைக் மோதி டிரைவர் பலி
  • whatsapp icon

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன்(38). இவர் இன்று காலை பையர்நத்தத்தில் இருந்து இறைச்சி எடுத்து கொண்டு மனைவி பிரியா (26)-வின் கிராமமான மாரியம்பட்டிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது பீணியாற்றின் பாலம் வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக  ரோட்டோர மைல் கல்லில் பைக்  மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தமிழரசனை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புகாரின்பேரில் அ.பள்ளிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News