பாலக்கோடு அருகே 1300 கிலோ அரிசி பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே 1300 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-11 00:15 GMT

ரேஷன் அரிசி பதுக்கி கைதானவர். 

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் வளர்மதி உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், இராமர், சிவபெருமாள் மற்றும் ஹெட் கான்ஸ்டபில் செந்தில் குமார் உள்ளிட்ட போலீசார் பாலக்கோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, பாலக்கோடு மைதின் நகர் அருகில் 1300 கிலோ ரேசன் அரிசியை இருப்பதாக கிடைத்த தகவலின் படி சென்று விசாரித்ததில்,  அதேபகுதியை சேர்ந்த இம்ரான் என்பவர், அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News