காரிமங்கலம் அருகே கார் மோதி விவசாயி பலி

காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-06 12:30 GMT

காரிமங்கலம் காவல் நிலையம்.

தர்மபுரி மாவட்டம் குண்டலபட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 57 விவசாயி. இவர் தனது தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய்களை மூட்டையாக கட்டி இருசக்கர வாகனத்தில் மாட்லாம்பட்டிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார். சட்டக்கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்த போது கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுப்பிரமணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags:    

Similar News