பிரசவத்தின் போது மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை
சுகாதார நிலையத்தில் பிரசவ அறையில், பிரசவம் நடக்கும் போது மேல்தளம் இடிந்து விழுந்ததில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.;
நல்லூர் பகுதியில் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது மேல்தளம் இடிந்து விழுந்தது.
பிரசவம் நடக்கும் போது மேல்தளம் இடிந்து விழுந்ததில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது விருத்தாசலம் அருகே பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் பகுதியில் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறையில், பிரசவம் நடக்கும் போது மேல்தளம் இடிந்து விழுந்ததில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மருத்துவர் செவிலியர்கள் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் அப்போது உடன் இருந்த சுமார் அறுபது வயது பெண்மணி சிறுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு மருத்துவமனையில் பல கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உடனே சரி செய்ய பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துயுள்ளனர் ,பிரசவ அறை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.