விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-01-06 10:23 GMT

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க விவசாயிகள் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி தனியார் மண்டபத்தில் கடலூர் மாவட்ட கரும்பு வளர்ப்பு சங்க பொதுக்குழு கூட்டம் கௌரவ தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது .இதில், விருத்தாசலம் திட்டக்குடி, பெண்ணாடம் ,வேப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.

மூடி கிடக்கும் பெண்ணாடம் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் விருத்தாசலம் அருகே உள்ள சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தி, இந்த ஆலை பகுதிக்கு கரும்பு சப்ளை செய்யும் உற்பத்தியாளர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைப்பது,

கடந்த 4 ஆண்டுகளாக ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எப்ஆர்எப் தொகை 30.99 கோடி ரூபாய் மற்றும் எஸ்.ஏ பி. ரூ. 78.62 கோடி, திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எப்.ஆர்.பி. தொகை  ரூ.11.20 கோடி மற்றும் எஸ்.ஏ.பி.ரூ. 43. 79 கோடி நிலுவைத் தொகையையும், விவசாயிகளின் பெயரில் வங்கியில் பெற்ற ஹார்வேஸ்ட் டிரான்ஸ்போர்ட் வங்கிக் கடன் ரூ. 40 கோடி விவசாயிகளுக்கு விரைவாக வழங்க தமிழக முதலமைச்சரையும், மற்றும் வேளாண் துறை அமைச்சரையும், தொழிலாளர் நலத் துறை அமைச்சரையும் சந்தித்து வலியுறுத்துவது,  கரும்புக்கு கட்டுப்படியான விலை பெறுவது, கரும்பு பயிரிட ஆகும் செலவு கூடுதலாகவும், ஆள் கூலி அதிகமாக ஆவதாலும் ஒரு டண் ஒன்றுக்கு 3,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் , கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை அனைத்தையும் பெற சர்க்கரை ஆலை முன்பு உண்ணாவிரதம் மற்றும் அறப் போராட்டம் நடத்துவது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News