பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆா்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-04-15 06:03 GMT

ஜெகன் மோகினி வேடம் அணிந்த ஒருவர், சமையல் அடுப்பில் கால்களை வைத்து, வாணலியில் சமைப்பது போல நூதன போராட்டம் 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் விருத்தாசலம் பாலக்கரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியராஜா, தொகுதி துணை செயலாளர் பீட்டா், தொகுதி தலைவர் சக்திவேல், துணை தலைவர்கள் முருகன், அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் ஜெகன் மோகினி வேடம் அணிந்த ஒருவர், சமையல் அடுப்பில் கால்களை வைத்து, வாணலியில் சமைப்பது போல நூதன போராட்டமும் நடைபெற்றது.

இதில் ராஜேந்திரன், மாணிக்கம், பிரபாகரன், சந்தோஷ், பழனிவேல், தனலட்சுமி, ஜெகநாதன், மணிகண்டன், பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News