ஓபிஎஸ், சி.வி சண்முகம் கைது: விருத்தாசலத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-08-31 10:55 GMT

ஓபிஎஸ் கைதை கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர்

தமிழக சட்டமன்றத்தில் விழுப்புரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்துடன் இணைப்பதற்கு முன்மொழிவை தாக்கல் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை கண்டித்தும் உடனடியாக அவர்களை விடுதலை செய்யக் கோரியும், விருத்தாசலம் நகர கழக செயலாளர் சந்திரகுமார்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News