வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

முறைகேடாக ஓப்பந்ததார்களுக்கு பணம் வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2021-09-06 05:45 GMT

வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையளர் பவுன்ராஜ்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையளராக இருந்தவர் பவுன்ராஜ். இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நகராட்சி பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய திருப்பூர் மண்டல நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். மேலும் பவுன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மோசடி தொடர்பாக பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 15 கோடி மோசடி ஒரு வழக்காகவும், 35 லட்சம் மோசடி ஒரு வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 15 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கை கோவை மாவட்ட குற்றபிரிவில் இருந்து கோவை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றி டிஜிபி அலுவலகம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், கோவை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் வால்பாறை நகராட்சியின் முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது புதியதாக மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நகராட்சி ஆணையருக்கு இருக்கும் அதிகாரத்தை தாண்டி, முறைகேடாக ஓப்பந்ததார்களுக்கு பணம் வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த உள்ளாட்சி துறை அதிகாரிகளில் பவுன்ராஜ் முக்கியமானவர் என கருதப்படும் நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News