கஞ்சா விற்ற மூன்று பேர் சிக்கினர்; 3 கிலோ கஞ்சா பறிமுதல்
Ganja In Tamil - அவிநாசியை அடுத்துள்ள கருமத்தம்பட்டி பகுதியில், கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;
அவிநாசியை அடுத்துள்ள கருமத்தம்பட்டி பகுதியில், கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
Ganja In தமிழ் - கருமத்தம்பட்டி - மாதப்பூர் ரோட்டில், கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்ற மூவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அவர்கள், அஸ்ஸாமை சேர்ந்த ரபிக் இஸ்லாம் 21, சட்டீஸ்கரை சேர்ந்த சட்குமார் சேத், 25, ஒடிசாவை சேர்ந்த சரத் தாண்டியா, 25 என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 3.300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2