கோவை அருகே 3 பேரால் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: இருவர் கைது

கோவையில், தனியாக இருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக, பேக்கரி உரிமையாளர், அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-18 07:24 GMT

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (26), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தைகள் இல்லை. மோகன்ராஜ் தனக்கு தெரிந்த உறவினர் நாகேந்திரன் என்பவர் மூலம் கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள பசூரில்,  டீ டைம் என்ற பெயரில் பேக்கரிக்கு, தனது 21 வயது மனைவியுடன் வேலைக்கு வந்துள்ளார். பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டி (31) ஊரடங்கு என்பதால்,  கணவன் மனைவி இருவரையும் பேக்கரிக்கு அருகில் உள்ள வீட்டில் தங்க வைத்தார்.

இந்நிலையில் மோகன்ராஜ், அதே பகுதியில் உள்ள மில் ஒன்றில் வேலைக்கு சென்றுவிட்டார். மோகன்ராஜின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டி மற்றும் அவரது நண்பர்கள் சமீர் மற்றும் சிகாபுதீன் ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் மோகன்ராஜின் மனைவியை தொடர்ந்து மிரட்டி,  பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், கணவரிடமும் அந்த பெண் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி சோகத்துடன் இருப்பதை பார்த்த மோகன்ராஜ் விசாரித்த போது, நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மொய்தீன்குட்டி நண்பர்களான பாலக்காட்டை சேர்ந்த சமீர் (28) மற்றும் சிகாபுதீன் (29) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மொய்தீன் குட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News