குமாரபாளையம்:டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

கோயம்புத்தூர் குமாரபாளையம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்ட்டது.

Update: 2021-05-28 10:15 GMT

கொள்ளை நடைபெற்ற டாஸ்மாக் மதுபானக்கடை.

கோவை மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த காக்காபாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் மதுபான கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு பதிவான கை ரேகைகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையில் இருந்த மது பானங்களை சோதனை செய்தனர். அப்போது ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்கை அவர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்த நிலையில் இங்கு முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும், காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ளாமல் இருந்ததும், இந்த திருட்டு சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News