மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர ரயில் சேவை டிசம்பர் 26 வரை நீட்டிப்பு

வாராந்திர ரயில் சேவைகளை நிரந்தரமாக இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-11-27 10:37 GMT

கோப்புப்படம் 

மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே வாராந்திர ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து ஞாயிறு தோறும் புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை மேட்டு ப்பாளையத்துக்கு செல்லும். இதே போல மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்தோறும் புறப்படும் ரயில், அடுத்த நாள் நெல்லைக்கு செல்லும்.

மேலும் இருமார்க்கங்களிலும் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடை யம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்து க்கடவு, போத்தனூர், கோவையில் நின்று செல்கின்றன.

மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரயில் சேவை இன்று 27ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட சிறப்பு ரயில்களின் சேவை அடுத்த மாதம் டிசம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.

மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு, பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரயில் சேவை பொதுமக்களுக்கு மிகவும் பலனளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மேற்கண்ட ரயில் சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே மேட்டுப்பாளை யம்-நெல்லை இடையேயான வாராந்திர ரயில் சேவையை மாதந்தோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீட்டிப்பு செய்யக்கக்கூடாது. மேலும் அந்த வாராந்திர ரயில் சேவைகளை நிரந்தரமாக இயக்குவதற்கான நடவடிக்கையை தென்னக ரயில்வே அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கூறினர்

Tags:    

Similar News