வனத்தியாகிகள் தினம்: 27 குண்டுகள் முழங்க மரியாதை

ஆண்டு தோறும் செப்டம்பர் 11ம் தேதி வனத்தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Update: 2021-09-11 11:00 GMT

வனத்தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை.

வனத்தையும், வன விலங்கையும் பாதுகாக்கும் பணியில் உயிரிழந்த வனத்துறை ஊழியர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் 11ம் தேதி வனத்தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நினைவு தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதற்கு வனத்துறை அதிகாரிகள், பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மரியாதை செய்தனர்.

வனத்துறை சார்பில், தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தின் இயக்குநரும் கூடுதல் முதன்மை வன பாதுகாவலருமான மஞ்சுநாதா மற்றும் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் மாநில வன பணிகளுக்கான முதல்வர் திருநாவுக்கரசு,கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன்,கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் ஆகியோர் நினைவு துணுக்கு மலர் வலையம் வைத்து மரியாதை செய்தனர். அதே போல் அண்மையில் பணியில் உயிரிழந்த வனக்காவலர் சதீஸ்குமார் குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர். இதன் நோக்கம், வனத்தையும், வன உயிரினங்களை பாதுகாக்கும் பணியில் உயிர் தியாகத்தை நினைவு கொள்ளவும், சக ஊழியர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக கடை பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக காவல்துறை சார்பில் 27 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News