எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை : காவல் ஆணையர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம்

எஸ்பி.ஐ. வங்கி கொள்ளை குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-22 11:26 GMT

எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் பேட்டியளித்தார்.

சென்னை எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக எஸ்.பி.ஐ.யின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளரிடம் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நடந்த நூதன கொள்ளை நடந்தது எப்படி என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால், எஸ்பிஐ வங்கி கொள்ளை குறித்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளை சம்பவங்கள் குறித்து மற்ற வங்கிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News