மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்டு மீண்டும் கவர்னர், உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-01-08 12:42 GMT

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.

அமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தால் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் சென்று நேரில் வலியுறுத்தலாம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் பிற மாநிலங்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த நிலைபாட்டை உருவாக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்பட உள்ளது.

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மீண்டும் ஆளுநரை சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது அதிமுகவும் இந்த விவகாரத்தில் முழு ஆதரவு கொடுத்துள்ளது அவர்கள் கூறிய ஆலோசனையின் படியே மீண்டும் உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்கலாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அதையும் முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் திறப்பு தொடர்பான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News