கொரோனா தொற்றிலிருந்து தொகுதி மக்களை காப்பாற்றுங்கள் - கமல் வேண்டுகோள்

Update: 2021-05-11 08:59 GMT

கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்று பதவி ஏற்றிருக்கும் புது எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும் தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்ற வேண்டும் என புது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி  கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்து இருந்தார்.

Tags:    

Similar News